search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருச்செங்கோட்டில் வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது

    திருச்செங்கோட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு டவுன் சூளை சந்து பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டில் மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா வரவணை வேப்பங்குடியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 25), கரூர் செங்குந்தபுரம் முதல் தெருவை சேர்ந்த நவீன் (18) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும், வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை வாங்கி, அதிக விலைக்கு வெளியில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் ரேஷன் அரிசியை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×