என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செங்கோட்டில் வீட்டில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
Byமாலை மலர்31 Aug 2020 7:11 AM GMT (Updated: 31 Aug 2020 7:11 AM GMT)
திருச்செங்கோட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு டவுன் சூளை சந்து பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டில் மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா வரவணை வேப்பங்குடியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 25), கரூர் செங்குந்தபுரம் முதல் தெருவை சேர்ந்த நவீன் (18) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும், வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை வாங்கி, அதிக விலைக்கு வெளியில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் ரேஷன் அரிசியை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X