search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    குடும்ப தகராறில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

    குடும்ப தகராறில் விரக்தியடைந்து பெட்ரோ ஊற்றி தீக்குளித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூங்காவனம் (28). இவர்களுக்கு மித்திரன் (4) என்ற மகன் உள்ளான். குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 24-ந் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த செல்லதுரை தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால் அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் அங்கு செல்லத்துரை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து அவரது மனைவி பூங்காவனம் சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×