search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அவினாசி அருகே வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் தொழிலாளி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தெக்கலூர் புறவழிச்சாலையில் இருந்து அவினாசி நோக்கி கல் ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்றது.அவினாசி நாதம்பாளையம் பிரிவு அருகே வரும் போது எதிர் பாராதவிதமாக வேனின் முன்புற டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் கட்டடக்கல், வேனில் பயணம் செய்த தொழிலாளர்கள் மீது விழுந்ததில் சுரேஷ்(20) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த பாண்டி, சதீஷ்குமார் உள்பட 6 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×