search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை
    X
    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

    பாஜகவில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்கு பதிவு

    பாஜகவில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    கோவை:

    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த 25ந்தேதி பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு கோவை மாவட்டம் சித்தாப்புதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, எஸ்.ஆர்.சேகர் உள்பட 5 பேர் மீது காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஊரடங்கு விதிகளை மீறி ஒன்று கூடுதல், நோய் பரப்பும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×