என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 100 பேரிடம் ரூ.2 கோடி மோசடி- கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்28 Aug 2020 2:15 AM GMT (Updated: 28 Aug 2020 2:15 AM GMT)
வீடு வாடகைக்கு பிடித்து தருவதாக கூறி சென்னையில் 100 பேரிடம் ரூ.2 கோடி பணத்தை சுருட்டிய கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை புறநகர் பகுதிகளான சேலையூர், நன்மங்கலம், பம்மல், தாம்பரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் ஒரு கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்டு வந்தது. ஒப்பந்த அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு பிடித்து தருவதாக கூறி இந்த கும்பல் ரூ.2 கோடி பணத்தை சுருட்டியது. இந்த கும்பலிடம் பணத்தை கொடுத்து 100 பேர் ஏமாந்து விட்டனர்.
பாதிக்கப்பட்ட 100 பேரும் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் ‘வாட்ஸ்-அப்’ வீடியோ காலில் பேசி புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் இந்த மோசடியில் ஈடுபட்டதாக சேலம் அயோத்தியா பட்டினத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 32), அவரது மனைவி காயத்ரி (30) மற்றும் ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ் (27) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புறநகர் பகுதிகளான சேலையூர், நன்மங்கலம், பம்மல், தாம்பரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் ஒரு கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்டு வந்தது. ஒப்பந்த அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு பிடித்து தருவதாக கூறி இந்த கும்பல் ரூ.2 கோடி பணத்தை சுருட்டியது. இந்த கும்பலிடம் பணத்தை கொடுத்து 100 பேர் ஏமாந்து விட்டனர்.
பாதிக்கப்பட்ட 100 பேரும் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் ‘வாட்ஸ்-அப்’ வீடியோ காலில் பேசி புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் இந்த மோசடியில் ஈடுபட்டதாக சேலம் அயோத்தியா பட்டினத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 32), அவரது மனைவி காயத்ரி (30) மற்றும் ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ் (27) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X