என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்பகோணம் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள வண்ணக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் கல்யாண சுந்தரம்(வயது31). எலக்ட்ரீசியன். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு கல்யாணசுந்தரம் தனது வீட்டு வாசலில் நின்றிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் இவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரும் கல்யாணசுந்தரத்திடம் சென்று முன்விரோதம் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து கல்யாணசுந்தரத்தை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் திருவிடைமருதூர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கல்யாணசுந்தரத்தின் உறவினர் மகளை நவீன் காதலித்து வந்ததாகவும், இவர்களது காதலுக்கும், திருமணத்துக்கும் கல்யாணசுந்தரம் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்யாணசுந்தரம் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய நவீன், மகேந்திரன் ஆகிய இருவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்