search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    தஞ்சையில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

    தஞ்சையில் உள்ள எல்.ஐ.சி தலைமை அலுவலகம் முன்பு அகில இந்திய முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உள்ள எல்.ஐ.சி தலைமை அலுவலகம் முன்பு அகில இந்திய முகவர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தங்கமணி தொடங்கி வைத்தார். ஊழியர் சங்க தலைவர் சேதுராமன், மாநில செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். முகவர் மருத்துவ காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை சீர் செய்ய வேண்டும், முகவர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் துணை தலைவர் சிவா நன்றி கூறினார்.
    Next Story
    ×