என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து- டிரைவர் காயம்
Byமாலை மலர்26 Aug 2020 7:39 AM GMT
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயமடைந்தார்.
அவினாசி:
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த மார்கண்டேயன் மகன் சிவக்குமார் (வயது 36). இவர் தனது வாடகை காரில் வாடிக்கையாளருடன் கன்னியாகுமரியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்தார். அங்கு அவர்களை இறக்கிவிட்டு விட்டு கோவை மாவட்டம் துடியலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
கார் அவினாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் அரசுப்பணியாளர் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த சிவக்குமார் லேசான காயமடைந்தார். இது பற்றி தகவலறிந்ததும் அவினாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று கிரேன் மூலம் காரை மீட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த மார்கண்டேயன் மகன் சிவக்குமார் (வயது 36). இவர் தனது வாடகை காரில் வாடிக்கையாளருடன் கன்னியாகுமரியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்தார். அங்கு அவர்களை இறக்கிவிட்டு விட்டு கோவை மாவட்டம் துடியலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
கார் அவினாசியை அடுத்த ஆட்டையாம்பாளையம் அரசுப்பணியாளர் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த சிவக்குமார் லேசான காயமடைந்தார். இது பற்றி தகவலறிந்ததும் அவினாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று கிரேன் மூலம் காரை மீட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X