search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வெள்ளகோவில் அருகே மது விற்றவர் கைது

    வெள்ளகோவில் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரட்டுப்பாளையத்தில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்பனைசெய்துகொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் வெள்ளகோவில் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் மகேந்திரன் (வயது 30) என்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அரசு அனுமதியின்றி மதுபானத்தை விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    Next Story
    ×