என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம்
Byமாலை மலர்22 Aug 2020 10:11 AM GMT (Updated: 22 Aug 2020 10:11 AM GMT)
சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர். போலீசார் அவர்களுடைய பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கன்னங்குறிச்சி:
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 26). கட்டிட தொழிலாளியான இவர் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த பிரியா(24) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ராமதாஸ், பிரியா ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி நங்கவள்ளியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது. அதைத்தொடர்ந்து காதல் ஜோடியின் பெற்றோரை அம்மாபேட்டை மகளிர் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முரளி(33). இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் சர்மிளா(31) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் முரளி, சர்மிளா ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டதுடன் பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களுடைய பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 26). கட்டிட தொழிலாளியான இவர் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த பிரியா(24) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ராமதாஸ், பிரியா ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி நங்கவள்ளியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது. அதைத்தொடர்ந்து காதல் ஜோடியின் பெற்றோரை அம்மாபேட்டை மகளிர் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முரளி(33). இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் சர்மிளா(31) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் முரளி, சர்மிளா ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டதுடன் பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களுடைய பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X