என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி- ஐகோர்ட்
Byமாலை மலர்21 Aug 2020 8:36 AM GMT (Updated: 21 Aug 2020 8:36 AM GMT)
விநாயகர் சதுர்த்திக்காக வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சென்னை:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுத்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் சிலை வைக்கவோ ஊர்வலம் செல்லவோ அனுமதி இல்லை என தீர்ப்பளித்தது.
அதேசமயம், வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனி நபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் என அனுமதி அளித்தது.
சென்னையில் விநாயகர் சிலைகளை மெரினா கடற்கரை தவிர்த்து பிற நீர்நிலைகளில் தனிமனித இடைவெளியுடன் கரைக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுத்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் சிலை வைக்கவோ ஊர்வலம் செல்லவோ அனுமதி இல்லை என தீர்ப்பளித்தது.
அதேசமயம், வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனி நபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் என அனுமதி அளித்தது.
சென்னையில் விநாயகர் சிலைகளை மெரினா கடற்கரை தவிர்த்து பிற நீர்நிலைகளில் தனிமனித இடைவெளியுடன் கரைக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X