search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கூட்டுறவு சங்கத்தில் ரூ.12 லட்சம் மோசடி- முன்னாள் செயலாளர் உள்பட 4 பேர் கைது

    கூட்டுறவு சங்கத்தில் ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் செயலாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமகிரிப்பேட்டை:

    நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலத்தில் முன்னாள் தலைவர் பூமாலை, முன்னாள் செயலாளர் ஜெயவேல் உள்பட 9 பேர் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்து இருப்பதாக மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளருக்கு புகார் சென்றது. அதன்பேரில் நடந்த விசாரணையில் ரூ.12 லட்சம் வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட பதிவாளர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    அதைத்தொடர்ந்து சங்கத்தின் அப்போதைய தலைவர் பூமாலை, செயலாளர் ஜெயவேல், எழுத்தர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முன்னாள் செயலாளர் ஜெயவேல் (வயது 54), எழுத்தர் ராமச்சந்திரன் (58) மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களான பழனிசாமி(50), பச்சியப்பன்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் தலைமறைவாக உள்ள சங்கத்தின் முன்னாள் தலைவர் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×