என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூரில் நேற்று 56 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்15 Aug 2020 8:58 AM GMT (Updated: 15 Aug 2020 8:58 AM GMT)
திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் 2,146 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2,146 பேருக்கு கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று திருவாரூர் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்ட அளவில் சாவு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் திருவாரூர் பகுதியை சேர்ந்த 8 பேர், நன்னிலம் பகுதியை சேர்ந்த 12 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மன்னார்குடி பகுதியை சேர்ந்த 3 பேர், கூத்தாநல்லூர் கணவன்-மனைவி உள்பட 5 பேர், குடவாசல் பகுதியை சேர்ந்த 2 பேர், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த தலா ஒருவர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 56 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட அளவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,202 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 40 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் தற்போது அரசு மருத்துவமனைகளில் 369 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2,146 பேருக்கு கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று திருவாரூர் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்ட அளவில் சாவு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் திருவாரூர் பகுதியை சேர்ந்த 8 பேர், நன்னிலம் பகுதியை சேர்ந்த 12 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மன்னார்குடி பகுதியை சேர்ந்த 3 பேர், கூத்தாநல்லூர் கணவன்-மனைவி உள்பட 5 பேர், குடவாசல் பகுதியை சேர்ந்த 2 பேர், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த தலா ஒருவர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 56 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட அளவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,202 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 40 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் தற்போது அரசு மருத்துவமனைகளில் 369 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X