search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை   கோப்புப்படம்
    X
    கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

    பெரம்பலூரில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று

    பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், எளம்பலூர் ரோடு, கிருஷ்ணா நகர், பெரியார் தெரு, இந்திரா நகர், வெங்கடாஜலபதி நகர், எம்.எம்.நகர், வெங்கடேசபுரம், துறைமங்கலம் நியூ காலனி ஆகிய பகுதிகளில் 12 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் பெண்ணக்கோணம், வயலூர் கருப்பட்டான்குறிச்சி, துங்கபுரம் தெற்கு தெரு, லெப்பைக்குடிகாடு மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் 4 பேருக்கும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் வி.களத்தூர், பிம்பலூர், மரவந்தம், உடும்பியம், பூலாம்பாடி, கை.களத்தூர் ஆகிய பகுதிகளில் 8 பேருக்கும் என மொத்தம் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    ஆனால் நேற்று ஆலத்தூர் வட்டாரத்தில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 863 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் மாவட்டத்தில் 54 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 664 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 292 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×