search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருச்செங்கோடு அருகே விபத்தில் பெண் பலி

    திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எலச்சிபாளையம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி அஞ்சலை தேவி (வயது 41). இவர்களுடைய மகள் காவியா (20) திருச்செங்கோடு அருகே வெப்படை பகுதியில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். இவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அஞ்சலை தேவி, அவருடைய அண்ணன் கோவிந்தராஜ் ஆகியோர் ஒரு மோட்டார்சைக்கிளில் திருச்செங்கோடு பகுதிக்கு வந்தனர். பின்னர் காவியாவை அழைத்து கொண்டு திருச்செங்கோடு அருகே சென்று கொண்டிருந்போது அங்கிருந்த வேகத்தடை மீது மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறி அஞ்சலை தேவி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    மற்ற 2 பேரும் காயமின்றி தப்பினர். அங்கிருந்தவர்கள் உதவியுடன் அஞ்சலை தேவியை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஞ்சலை தேவி இறந்தார். 

    இதுகுறித்து காவியா அளித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×