என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய கல்விக் கொள்கையை கண்டித்து இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்13 Aug 2020 4:37 PM GMT (Updated: 13 Aug 2020 4:37 PM GMT)
புதிய கல்விக் கொள்கையை கண்டித்து வந்தவாசி தேரடியில் உள்ள தபால் நிலையம் முன்பு இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வந்தவாசி:
வந்தவாசி தேரடியில் உள்ள தபால் நிலையம் முன்பாக இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வந்தை எம்.மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், புதிய கல்விக் கொள்கை, ரெயில்வே துறையை தனியார் மயமாக்கல் திட்டம் ஆகியவற்றை கைவிட வேண்டும், தற்காலிக தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு, கையில் பாடப்புத்தகத்தை வைத்திருந்தனர். இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் சி.எஸ்.கெளரிசங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.கோவிந்தராஜன், சென்னாவரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வீரராகவன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆறுமுகம், நகரத் தலைவர் எம்.ரமேஷ்பாபு, நகர செயலாளர் ஏ.குட்டி, மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X