என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நர்சிங் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்12 Aug 2020 1:24 PM GMT (Updated: 12 Aug 2020 1:24 PM GMT)
வந்தவாசியில் நர்சிங் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:
வந்தவாசி டவுன் சவேரியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகள் சந்தியா(வயது 19), வந்தவாசி அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 6 மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. சந்தியாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்ன்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இதுபற்றி அவருடைய தந்தை ஆனந்தன் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X