search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தோகைமலை அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    தோகைமலை அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தோகைமலை:

    தோகைமலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கடவூர் தாலுகா, கீரனூரை சேர்ந்தவர் தெய்வேஸ்குமார். இவருடைய மனைவி கண்மணி(வயது 22). இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கண்மணிக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாகவும், அதை தாங்கிக்கொள்ள முடியாத அவர் தனது சேலையால் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கீரனூர் வடக்குத்தெருவை சேர்ந்த கண்மணியின் தந்தை சங்கிலி(55) தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×