என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குற்றாலத்தில் யானை அட்டகாசம்
Byமாலை மலர்12 Aug 2020 9:04 AM GMT (Updated: 12 Aug 2020 9:04 AM GMT)
யானைகள் குற்றாலம் பகுதிக்கு வராதவகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தென்காசி:
குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் கரடி அருவி அருகில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளன. இந்த பகுதியில் தென்னை, பாக்கு, மா போன்ற மரங்களும் தனியாரால் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் காட்டு யானைகள் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து இங்கு உள்ள பயிர்களை சேதம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் ஒரு யானை வந்து இங்கு உள்ள ஒரு பாக்கு மரத்தை வேருடன் பிடுங்கி சாய்த்து அட்டகாசம் செய்து உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
இந்த யானைகள் தொடர்ந்து வந்தால் குற்றாலத்திற்கு செல்பவர்கள் மற்றும் அங்கு இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே யானைகள் குற்றாலம் பகுதிக்கு வராதவகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X