என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கைது
Byமாலை மலர்12 Aug 2020 8:14 AM GMT (Updated: 12 Aug 2020 8:21 AM GMT)
ஜோலார்பேட்டை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது36). இவருக்கும் இவரது உறவினரான சாமண்ணன் (52) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துவந்தது. இந்த நிலையில் சாமண்ணன் என்பவர் சபரிநாதனை அவர் வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளார்.
இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சாமண்ணன் அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சபரிநாதன், செல்வம், ஜெயபால் ஆகிய 3 பேரையும் கத்தியாலும் இரும்பு கம்பியாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். செல்வம் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் சபரிநாதன் கொடுத்த புகாரின் பேரில் வடிவேல் (30), பூபாலன் (28), ஆனந்தன் (30), குப்பன்(30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X