search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரு தரப்பினரிடையே  மோதல்
    X
    இரு தரப்பினரிடையே மோதல்

    ஜோலார்பேட்டை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கைது

    ஜோலார்பேட்டை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது36). இவருக்கும் இவரது உறவினரான சாமண்ணன் (52) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துவந்தது. இந்த நிலையில் சாமண்ணன் என்பவர் சபரிநாதனை அவர் வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளார்.

    இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சாமண்ணன் அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சபரிநாதன், செல்வம், ஜெயபால் ஆகிய 3 பேரையும் கத்தியாலும் இரும்பு கம்பியாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். செல்வம் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் சபரிநாதன் கொடுத்த புகாரின் பேரில் வடிவேல் (30), பூபாலன் (28), ஆனந்தன் (30), குப்பன்(30) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×