search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    தேன்கனிக்கோட்டை அருகே ராகி பயிர்களை நாசம் செய்த யானைகள்

    வனப்பகுதியில் இருந்து வந்த 3 யானைகள், ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த ராகி பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கூச்சுவாடி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 55), விவசாயி. இவர் ராகி பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் அய்யூர் வனப்பகுதியில் இருந்து வந்த 3 யானைகள், ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த ராகி பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. தோட்டத்திற்கு சென்ற முருகன் பயிர்களை யானைகள் சேதப்படுத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் அங்கு வந்து யானைகள் சேதப்படுத்திய ராகி பயிர்களை பார்வையிட்டார். மேலும் ராகி பயிருக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
    Next Story
    ×