search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை முயற்சி
    X
    கொள்ளை முயற்சி

    கொரடாச்சேரி அருகே மதுக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

    கொரடாச்சேரி அருகே மதுக்கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கொரடாச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையில் சந்திரசேகரன் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த கடையில் 3 பேர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இந்த கடைக்கு திருவாரூர் குடோனில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் வந்து இறங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஊழியர்கள் மதுக்கடையை பூட்டிவிட்டு விற்பனையான பணம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    நேற்று காலை மேற்பார்வையாளர் சந்திரசேகரன் கடையை திறக்க சென்றபோது கடையின் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார்.

    கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் அப்படியே இருந்தன. கடையில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் அங்கு அதிக அளவில் பணம் இல்லாததால், மதுபாட்டில்களை அப்படியே விட்டு சென்றது தெரியவந்தது. மேலும் விற்பனையானதன் மூலம் கிடைத்த ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் முன்னரே வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டதால் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது.

    இதுதொடர்பாக கடையின் மேற்பார்வையாளர் சந்திரசேகரன் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மூலம் கடையில் சோதனை நடத்தப்பட்டது.
    Next Story
    ×