என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 ஆண்டு நிறைவு: வெங்கையா நாயுடுவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
Byமாலை மலர்11 Aug 2020 7:28 PM GMT (Updated: 11 Aug 2020 7:28 PM GMT)
துணை ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்று 3 ஆண்டு நிறைவடைவதையொட்டி, வெங்கையா நாயுடுவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
நாட்டின் துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பொறுப்பு ஏற்று 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெங்கையா நாயுடுவுக்கு, ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மூத்தவர்கள் அடங்கிய அவையின் தலைவராக (மேலவை சபாநாயகர்) 3 ஆண்டு கால சகாப்தத்தை வெற்றிகரமாக முடித்ததை குறிக்கும், நமது பாராளுமன்றத்தின் ஆண்டுகளில் இது ஒரு ஒளிமயமான நாள் ஆகும். துணை ஜனாதிபதியின் பார்வை, தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து, அவையை குறுகிய காலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக நடத்துவதற்கு சிறப்பாக உதவியது.
வரும் ஆண்டுகளில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், பெருஞ்சிறப்பு கிடைக்கவும் அருள் புரியவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நான் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X