search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    ஊரடங்கில் அனுமதியின்றி பிறந்த நாள் கொண்டாட முயன்ற 9 பேர் மீது வழக்கு

    ஊரடங்கில் அனுமதியின்றி பிறந்த நாள் கொண்டாட முயன்ற 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ஊரடங்கு நேரத்தில் அனுமதியின்றி பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சி நடத்தும் முயற்சியாக சுவரொட்டியை ஒட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ஜெகன், மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் அனுமதி இன்றி பிறந்த நாள் விருந்து கொண்டாட முயன்றதாக போளிவாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக், குணா, அருண், மற்றொரு அருண் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×