search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    சொத்தில் பெண்களுக்கு சம உரிமை- முதலமைச்சர் வரவேற்பு

    சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ‘‘திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது’’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    சொத்துகளில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

    சமூக நீதியை காப்பாற்றும் விதமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



    Next Story
    ×