search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் ராஜாமணி
    X
    கலெக்டர் ராஜாமணி

    கலை நிகழ்ச்சிகள் ரத்து - சுதந்திர தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை - கலெக்டர் தகவல்

    கொரோனா காரணமாக சுதந்திர தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும், கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
    கோவை:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி எளிமையாக நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. கோவையில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:-

    கோவையில் இந்த ஆண்டு சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி வ.உ.சி. மைதானத்தில் வழக்கம் போல் நடைபெறும். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. போலீசாரின் அணிவகுப்பு மட்டும் நடைபெறும். சுதந்திர போரா ட்ட தியாகிகளை அவர்களது வீட்டிற்கு சென்று கவுரவிக்க திட்டமிட்டு உள்ளோம்.

    கொரோனா தொற்று காரணமாக சுதந்திர தின விழாவை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. இந்த விழாவில், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட டாக்டர்கள், வருவாய் துறையினர், உள்ளாட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரில் 50 பேரை தேர்வு செய்து கவுரவிக்க உள்ளோம். அரசு தரப்பில் 50 பேர் மட்டுமே பங்கேற்பர். இதே போல் பள்ளிகள், கல்லூரிகளில் சுதந்திர தின விழாவில் கூட்டம் கூட அனுமதி இல்லை.

    கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் மட்டுமே கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இங்கு சராசரியாக 140 முதல் 160 பேர் வரை தினமும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஊரக பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக இல்லை. இந்த மாத இறுதியில் கொரோனா தொற்று குறைய தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது கொரோனா பரிசோதனை செய்ததில் 15 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×