search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அரசு மருத்துவமனை
    X
    மதுரை அரசு மருத்துவமனை

    சிறப்பு எஸ்.ஐ. பால்துரை உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது

    மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. பால்துரை உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது.
    மதுரை:

    சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, கடந்த 24ந்தேதி கொரோனா உறுதி செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சிறப்பு எஸ்.ஐ.பால்துரை உயிரிழந்தார்.

    இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ. பால்துரை இறப்பு குறித்து மதுரை அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பத்மநாபன் விசாரணை நடத்தினார்.

    விசாரணைக்கு பின்னர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் மருத்துவர்கள் குழு பால்துரை உடல் பிரேத பரிசோதனையை தொடங்கினர். பால்துரை பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

    Next Story
    ×