என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானல் அருகே மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி
Byமாலை மலர்10 Aug 2020 9:26 AM GMT (Updated: 10 Aug 2020 9:26 AM GMT)
கொடைக்கானல் அருகே மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். மற்றொரு சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்து குதிரை பலியானது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன் லட்சுமணன் (வயது 25). இவருக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) திருமணம் நடத்துவதற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலை லட்சுமணன், தனது தோட்டத்துக்கு சென்றார்.
அப்போது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில், உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனால் அந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத லட்சுமணன், சோலார் மின்வேலியை தொட்டார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதேபோல் கொடைக்கானல் வில்பட்டி அருகே பேத்துப்பாறை கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் 3 குதிரைகளை விவசாய பணிக்காக வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அந்த குதிரைகளை தோட்டத்திற்கு அழைத்து சென்றார். அப்போது தோட்டத்திற்கு செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை அவரது குதிரை ஒன்று மிதித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அந்த குதிரை இறந்துபோனது.
கொடைக்கானல் அருகே பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகன் லட்சுமணன் (வயது 25). இவருக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) திருமணம் நடத்துவதற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலை லட்சுமணன், தனது தோட்டத்துக்கு சென்றார்.
அப்போது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில், உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனால் அந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத லட்சுமணன், சோலார் மின்வேலியை தொட்டார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதேபோல் கொடைக்கானல் வில்பட்டி அருகே பேத்துப்பாறை கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் 3 குதிரைகளை விவசாய பணிக்காக வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அந்த குதிரைகளை தோட்டத்திற்கு அழைத்து சென்றார். அப்போது தோட்டத்திற்கு செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை அவரது குதிரை ஒன்று மிதித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அந்த குதிரை இறந்துபோனது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X