search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் (கோப்புப்படம்)
    X
    கோவில் (கோப்புப்படம்)

    தமிழகத்தில் இன்று முதல் மாநகராட்சி பகுதிகளில் கோவில்கள் திறப்பு

    இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
    சென்னை:

    கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தில் இருந்து கோயில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மத தலைவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோயில்களில் நுழையும் பக்தர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாச நோய், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×