என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் இன்று முதல் மாநகராட்சி பகுதிகளில் கோவில்கள் திறப்பு
Byமாலை மலர்10 Aug 2020 9:21 AM GMT (Updated: 10 Aug 2020 9:21 AM GMT)
இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை:
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தில் இருந்து கோயில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மத தலைவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோயில்களில் நுழையும் பக்தர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாச நோய், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தில் இருந்து கோயில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மத தலைவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோயில்களில் நுழையும் பக்தர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாச நோய், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X