search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    தேனியில் இன்று மேலும் 362 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தேனியில் இன்று மேலும் 362 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 7,900 ஆக அதிகரித்துள்ளது.
    தேனி:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 362  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,900 ஆக அதிகரித்துள்ளது.

    தேனி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 127 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,596 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது தேனி மாவட்டத்தில் 2,851 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    Next Story
    ×