என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நதிநீர் இணைப்பு திட்டத்தின் 4ம் கட்ட பணிக்கு நிதி ஒதுக்கீடு- முதலமைச்சருக்கு எம்பி வசந்தகுமார் நன்றி
Byமாலை மலர்8 Aug 2020 8:55 AM GMT (Updated: 8 Aug 2020 8:55 AM GMT)
நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எம்பி வசந்தகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:
மத்திய அரசின் நீர்வளத்துறை மற்றும் ஆறுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் 2009 ஆம் ஆண்டு ரூ.369 கோடி மொத்த மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், மழைக்காலங்களில் தாமிரபரணியில் வீணாகி கடலில் கலக்கும் 13 ஆயிரத்து 800 மில்லியன் கனஅடி நீரை திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளுக்கு கால்வாய் மூலம் திருப்பிவிடும்.
இந்த திட்டம் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு கால்வாய் பணிகள் நடைபெற்று வந்தன. இதுவரை மூன்று கட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து கொரோனா காலத்திலும் தாமிரபரணி வெள்ளநீர் திட்ட பணிகள் தடைபடக்கூடாது என்பதற்காக நான்காம் கட்ட பணிகளுக்காக தமிழக அரசு 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எம்பி வசந்தகுமார் நன்றி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், தனிப்பட்ட முறையில் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
மத்திய அரசின் நீர்வளத்துறை மற்றும் ஆறுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் 2009 ஆம் ஆண்டு ரூ.369 கோடி மொத்த மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், மழைக்காலங்களில் தாமிரபரணியில் வீணாகி கடலில் கலக்கும் 13 ஆயிரத்து 800 மில்லியன் கனஅடி நீரை திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளுக்கு கால்வாய் மூலம் திருப்பிவிடும்.
இந்த திட்டம் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு கால்வாய் பணிகள் நடைபெற்று வந்தன. இதுவரை மூன்று கட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து கொரோனா காலத்திலும் தாமிரபரணி வெள்ளநீர் திட்ட பணிகள் தடைபடக்கூடாது என்பதற்காக நான்காம் கட்ட பணிகளுக்காக தமிழக அரசு 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எம்பி வசந்தகுமார் நன்றி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், தனிப்பட்ட முறையில் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X