என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லால்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி
Byமாலை மலர்8 Aug 2020 6:49 AM GMT (Updated: 8 Aug 2020 6:49 AM GMT)
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடியில் ரெயில்வே மேம்பாலம் அருகே திருவள்ளுவர் நகர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வணிகவளாகம் உள்ளது. இந்த வணிகவளாக கட்டிடத்தில் தரைதளத்தில் 5 கடைகளும், முதல் தளத்தில் 5 கடைகளும் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்று வீசியபோது, கட்டிடத்தின் மேல் தளத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்த ஆங்கரை பகுதியை சேர்ந்த சிறுவர்கள் எபிநேசன் (வயது 14), சஞ்சய் (13) மற்றும் அங்கு பொருட்கள் வாங்க தந்தை கமலக்கண்ணனுடன் வந்த சிறுமி நிஷாந்தி (12) மற்றும் தரைத்தளத்தில் உள்ள மருந்து கடையில் வேலை செய்யும் கவிதா (20) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் எபிநேசன், சஞ்சய் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் எபிநேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் ரெயில்வே மேம்பாலம் அருகே திருவள்ளுவர் நகர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வணிகவளாகம் உள்ளது. இந்த வணிகவளாக கட்டிடத்தில் தரைதளத்தில் 5 கடைகளும், முதல் தளத்தில் 5 கடைகளும் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்று வீசியபோது, கட்டிடத்தின் மேல் தளத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்த ஆங்கரை பகுதியை சேர்ந்த சிறுவர்கள் எபிநேசன் (வயது 14), சஞ்சய் (13) மற்றும் அங்கு பொருட்கள் வாங்க தந்தை கமலக்கண்ணனுடன் வந்த சிறுமி நிஷாந்தி (12) மற்றும் தரைத்தளத்தில் உள்ள மருந்து கடையில் வேலை செய்யும் கவிதா (20) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் எபிநேசன், சஞ்சய் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் எபிநேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X