என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பட்டணம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
Byமாலை மலர்7 Aug 2020 12:59 PM GMT (Updated: 7 Aug 2020 12:59 PM GMT)
காவேரிப்பட்டணம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த கெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காவேரி. இவரது மகன் ரங்கநாதன் (வயது 12). பன்னிஅள்ளி அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிகள் திறக்காததால் வீட்டில் இருந்த ரங்கநாதன், நேற்று காலை தனது நண்பர்களுடன் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றான்.
மழை பெய்து ஏரியில் அதிக அளவில் தண்ணீர் இருந்ததால், ஆழம் தெரியாமல் உள்ளே இறங்கி குளித்துள்ளான். இதனால் ரங்கநாதன் தண்ணீரில் மூழ்கினான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனுடைய நண்பர்கள் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர்.
இதையடுத்து அக்கம், பக்கம் இருந்தவர்கள் அங்கு வந்து ரங்கநாதனை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து இரு சக்கர வாகனத்தின் மூலம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுவனை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X