என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஸ்போர்ட் விண்ணப்ப நிலையை அறியும் வசதி
Byமாலை மலர்6 Aug 2020 6:43 AM GMT (Updated: 6 Aug 2020 6:43 AM GMT)
பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலையை வீடியோ அழைப்பு மூலம் அறியும் வசதியை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை:
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள பொது விசாரணை கவுண்ட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இருந்தாலும், நிலுவையில் உள்ள அவசரமான பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ‘ஸ்கைப்’ மூலம் வீடியோ அழைப்பு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்ள, விண்ணப்பதாரர்கள், அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை, Regional Passport Office Chennai என்ற ‘ஸ்கைப்’ முகவரியில் தொடர்புக்கொள்ளலாம்.
இந்த ஸ்கைப் வீடியோ அழைப்பு வசதி பொது விசாரணைக்கு பொருந்தாது. இது அவசர விசாரணைக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான பொது விசாரணைகளுக்கு 18002581800 என்ற இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம். rpo.chennai@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பலாம்.
மேற்கண்ட தகவல் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள பொது விசாரணை கவுண்ட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இருந்தாலும், நிலுவையில் உள்ள அவசரமான பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ‘ஸ்கைப்’ மூலம் வீடியோ அழைப்பு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்ள, விண்ணப்பதாரர்கள், அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை, Regional Passport Office Chennai என்ற ‘ஸ்கைப்’ முகவரியில் தொடர்புக்கொள்ளலாம்.
இந்த ஸ்கைப் வீடியோ அழைப்பு வசதி பொது விசாரணைக்கு பொருந்தாது. இது அவசர விசாரணைக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான பொது விசாரணைகளுக்கு 18002581800 என்ற இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம். rpo.chennai@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பலாம்.
மேற்கண்ட தகவல் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X