search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்
    X
    கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்

    பிலிக்கல்பாளையத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

    பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் ஊராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் ஊராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பிலிக்கல்பாளையம் மல்லிகாபுரத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை லோகநாதன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நல்லாகவுண்டம்பாளையத்தில் நிறைவடைந்தது. இதில் ஊராட்சி செயலாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் முககவசம் அணிவதன் அவசியம், சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் ஊர்வலம் நடைபெற்றது.
    Next Story
    ×