search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஊரடங்கை மீறிய 161 பேர் கைது

    நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 161 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதற்கிடையே ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி சுற்றித்திரிபவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கை மீறியதாக 161 பேர் கைது செய்யப்பட்டனர். 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 10 இடங்களில் வாகன சோதனை நடத்திய போலீசார் முககவசம் அணியாமல் வந்த 170 பேருக்கு அறிவுரைகள் வழங்கினர்.
    Next Story
    ×