search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X
    டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    முள்ளிப்பாடியில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடியில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். இதில் கவுரவ தலைவர் மகாமுனி, மாநிலக்குழு உறுப்பினர் கோபால், மாவட்ட செயலாளர் சீனிவாசன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது 17 ஆண்டுகளாக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
    Next Story
    ×