search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    முககவசம் அணியாத 546 பேருக்கு அபராதம்

    திருப்பூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத 546 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 20 பறக்கும்படை குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது மொத்தம் 818 கடைகள், மற்றும் 164 நிறுவனங்களில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனங்கள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

    இதுபோல் முககவசம் அணியாமல் வீதியில் நடமாடியவர்கள் குறித்து சோதனை நடத்தியதில் 5 ஆயிரத்து 503 பேரை சோதனை செய்து 546 பேர் முககவசம் அணியாமல் வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. பறக்கும் படைகுழு மூலமாக மாவட்டம் முழுவதும் ரூ.70 ஆயிரத்து 550 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பல்லடம் ஒன்றிய பகுதியில் ரூ.11 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×