என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகிரி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
Byமாலை மலர்5 Aug 2020 10:11 AM GMT (Updated: 5 Aug 2020 10:11 AM GMT)
சிவகிரி அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி. இவரது மனைவி ஜோதி (வயது 55). இவர்களுக்கு, மகனும், மகளும் உண்டு. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மகன் வசித்து வருகிறார். திருமலைச்சாமி, அவரது மகள் இறந்து விட்டனர். இதனால் ஜோதி மட்டும் சிவகிரியில் தனியாக வசித்து வந்தார். ஆதரவற்றோர் உதவித்தொகை பெற்று அவர் வாழ்க்கை நடத்தி வந்தார்.
தற்போது கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக ஜோதி தனிமையில் தவித்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜோதி சிவகிரி அருகே விசுவநாதபேரி வடக்கு சத்திரம் இடையே உள்ள ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உடனடியாக சிவகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X