என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம் முழுவதும் 10ந்தேதி கடையடைப்பு- வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு
Byமாலை மலர்5 Aug 2020 6:25 AM GMT (Updated: 5 Aug 2020 6:25 AM GMT)
கோயம்பேடு சந்தையை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் 10-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோயம்பேடு காய்கறி வணிக வளாக சந்தை கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் உள்பட 38 மார்க்கெட் சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அரசு வருகிற 10-ந்தேதிக்குள் கோயம்பேடு வணிக வளாகத்தை திறப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டும். கோயம்பேடு வணிக வளாக கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நோய் எதிர்ப்பு பரிசோதனையை மேற்கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கின்றனர். நிரந்தர சுகாதார மையம் அமைக்கவேண்டும். மார்க்கெட் கமிட்டி உருவாக்க வேண்டும். கடைகளுக்கு காலநேரம் நிர்ணயம், வார விடுமுறை, சுகாதார நடவடிக்கைகள் அளிக்க வேண்டும்.
கோயம்பேடு சந்தையை வருகிற 10-ந்தேதி திறப்பதற்கான உத்தரவை அளிக்க அரசு தவறினால், முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காய்கறி, பூ, பழம் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகள் அனைத்தையும் ஒரு நாள் முழுமையாக அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தை தவிர்க்க, முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோயம்பேடு காய்கறி வணிக வளாக சந்தை கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் உள்பட 38 மார்க்கெட் சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அரசு வருகிற 10-ந்தேதிக்குள் கோயம்பேடு வணிக வளாகத்தை திறப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டும். கோயம்பேடு வணிக வளாக கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நோய் எதிர்ப்பு பரிசோதனையை மேற்கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கின்றனர். நிரந்தர சுகாதார மையம் அமைக்கவேண்டும். மார்க்கெட் கமிட்டி உருவாக்க வேண்டும். கடைகளுக்கு காலநேரம் நிர்ணயம், வார விடுமுறை, சுகாதார நடவடிக்கைகள் அளிக்க வேண்டும்.
கோயம்பேடு சந்தையை வருகிற 10-ந்தேதி திறப்பதற்கான உத்தரவை அளிக்க அரசு தவறினால், முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காய்கறி, பூ, பழம் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகள் அனைத்தையும் ஒரு நாள் முழுமையாக அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தை தவிர்க்க, முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X