search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது- அமைச்சர் விஜயபாஸ்கர்

    கொரோனாவிற்கு தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இதுவரை 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தல் 77.8 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன. தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது. மருத்துவர்கள் இறப்பு தகவலை இந்திய மருத்துவர்கள் சங்கமும் மறுத்துள்ளது.

    சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை வெளியிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்களை வெளியிட்டு மருத்துவர்களின் மனஉறுதியை சீர்குலைக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×