search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 50 பேர் மீது வழக்கு

    கொரோனா ஊரடங்கின் போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    பூதலூர் நான்கு சாலை பகுதியில் நேற்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கின் போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் உள்ளிட்ட 30 பேர் மீதும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 20 பேர் மீதும் பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    Next Story
    ×