search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    ஊரடங்கின் போது திறந்திருந்த 2 கடைகளுக்கு அபராதம்

    அன்னூர் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி திறந்திருந்த 2 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    அன்னூர்:

    அன்னூர் பகுதியில் நேற்று முழு ஊரடங்கையொட்டி அன்னூர் பறக்கும் படை தாசில்தார் ராஜன் மற்றும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாணம்பாளையம், சொக்கம்பாளையம் ஆகிய கிராமத்தில் ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சி கடை, மளிகை கடை திறந்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் ராஜன் 2 கடைகளுக்கு அபராதம் விதித்தார். மேலும் ஊரடங்கு காலத்தில் விதிமுறை மீறி கடைகளை திறக்கக்கூடாது என்று எச்சரித்தார்.
    Next Story
    ×