search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு விதிமீறல்: 215 வாகனங்கள் பறிமுதல்

    ஊரடங்கு விதிமீற 211 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள், 2 கார்கள் என மொத்தம் 215 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கையொட்டி நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி 51 பேர் கடைகளை திறந்து இருந்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வகையில் நேற்று 211 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள், 2 கார்கள் என மொத்தம் 215 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×