search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கொரோனா தடுப்பு பணி குறித்து மதுரை, நெல்லை, தென்காசியில் முதல்வர் பழனிசாமி 6ம் தேதி முதல் ஆய்வு

    கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் ஆய்வு செய்கிறார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை, திண்டுக்கல், தென்காசி, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் நேரில் ஆய்வு செய்கிறார்.

    அப்போது அவர் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்குகிறார்.
    Next Story
    ×