என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்னல் தரும் கல்வி கொள்கை எதிர்ப்பில் வென்று காட்டுவோம் - முக ஸ்டாலின் கடிதம்
Byமாலை மலர்1 Aug 2020 4:36 PM GMT (Updated: 1 Aug 2020 4:36 PM GMT)
இடஒதுக்கீடு வழக்கைப் போல இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்த அறிவிப்பிற்கு, தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
உண்மையான தேசத் தலைவர்கள் பலரும் மதித்துப் போற்றிய இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கும் நோக்கில் மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறது.
ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.
வெற்றிகரமாக செயல்பட்டு வரும் 10+2 என்கிற நடைமுறைக்கு மாறாக 5+3+3+4 என்கிற மாற்றம் மாணவர்கள் மீது நடத்தப்படுகின்ற உளவியல் ரீதியான தாக்குதலாகும்.
புதிய கல்வி கொள்கை குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்பில் எந்த தெளிவான அறிக்கையும் தற்போதுவரை வெளியாகவில்லை.
இந்திய மாணவர்களின் நலன் கருதி இடஒதுக்கீடு வழக்கைப் போல இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வெற்றி பெற்று சமூக நீதி காத்து சமத்துவ கல்வியை வளர்ப்போம்.
மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத பிற மாநில முதல்வர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு இந்திய மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் திமுக தொடர்ந்து மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X