search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
    X
    அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

    5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 5ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்- அம்பேத்கர் சட்டப் பல்கலை. அறிவிப்பு

    தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு வரும் 5ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு வரும் 5ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து www.tndalu.ac.in-ல் செப்டம்பர் 4 வரை சமர்ப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    ஆகஸ்ட் 10 முதல் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படும் என்று பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    மேலும் 3 ஆண்டு சட்டப்படிப்பு, முதுகலை சட்டமேற்படிப்பிற்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×