search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை நாசம் செய்த காட்டு யானை

    தேன்கனிக்கோட்டை அருகே யானை உணவுக்காக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தக்காளி உள்ளிட்ட பயிர்களை கால்களால் மிதித்து சேதப்படுத்தியது.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது மரக்கட்டா. இந்த பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. இந்த நிலையில் அந்த யானை நேற்று முன்தினம் இரவு உணவுக்காக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தக்காளி உள்ளிட்ட பயிர்களை மிதித்தும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தியது. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் தக்காளி செடிகள் சேதமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×