search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகூர் தர்கா
    X
    நாகூர் தர்கா

    நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி திருவிழா- தமிழக அரசு சார்பில் சந்தன கட்டைகள்

    நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி திருவிழாவுக்கு தமிழக அரசு சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்தியாவில் உள்ள புனித தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் முக்கியமானதும், சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) திருவிழாவிற்கு விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2012-ம் ஆண்டு நவம்பர் 25-ந் தேதியன்று அறிவித்தார்.

    அந்த வகையில், நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா நிர்வாக குழுவினரிடம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×