search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆத்தூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

    ஆத்தூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே புன்னக்காயல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜா மகன் ராபின்சன் (வயது 32). இவர் வெளிநாட்டில் கப்பல் மாலுமியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுஹாசினி (28). இவர்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்து, பின்னர் சில மாதங்களில் இறந்தது. இதனால் சுஹாசினி மனமுடைந்த நிலையில் இருந்தார்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்த ராபின்சன், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மீண்டும் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். இதற்கிடையே ராபின்சன் தனது ஊரில் சகோதரருடன் இணைந்து புதிதாக வீடு கட்டி வருகிறார். இதுதொடர்பாக ராபின்சன் தனது மனைவியுடன் செல்போனில் பேசும்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சுஹாசினி தனது வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுஹாசினி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×